நகைப்பாய் நெஞ்சே!
வசதியுள்ளோன் வாய்திறந்து கொட்டுகின்ற
.. வார்த்தையெல்லாம் கவிதையென்பார் நாணமின்றி
பசப்புமொழி பகல்வேடப் போர்வை என்று
.. பகுத்துணரார் இன்சொல்லே என்றுரைப்பார்
கசப்புணர்வுக் காரணத்தால் கருத்தை எட்டிக்
.. காயிலிதில் என்னசுவை என்பார்; காய்ச்சல்
வசமானோர் நிசமுணர்ந்தும் நிழலே என்பார்
.. வாழிடமே பாழிடந்தான்! நகைப்பாய் நெஞ்சே!
.. வார்த்தையெல்லாம் கவிதையென்பார் நாணமின்றி
பசப்புமொழி பகல்வேடப் போர்வை என்று
.. பகுத்துணரார் இன்சொல்லே என்றுரைப்பார்
கசப்புணர்வுக் காரணத்தால் கருத்தை எட்டிக்
.. காயிலிதில் என்னசுவை என்பார்; காய்ச்சல்
வசமானோர் நிசமுணர்ந்தும் நிழலே என்பார்
.. வாழிடமே பாழிடந்தான்! நகைப்பாய் நெஞ்சே!
கலைவல்லார் அரங்கத்தில் கீழிருக்கக்
.. கவர்ச்சியுடை யாளொருத்தி மேடை யேறி
அலைவிழியைச் சுழற்றியங்குக் காலை ஆட்டும்
.. அவலத்தை ரசிப்பானோ அறிவு ஜீவி
கலைவல்லார் குழுவுனிலே கலந்து கொள்ளக்
.. கடுகளவு பகுத்தறிவும் இல்லாம் கட்சித்
தலைவனுக்குத் தோல்கொடுப்பேன் என்று பேசும்
.. தமிழ்க் கொலைக்கும் தட்டும்கை! நகைப்பாய் நெஞ்சே!
.. கவர்ச்சியுடை யாளொருத்தி மேடை யேறி
அலைவிழியைச் சுழற்றியங்குக் காலை ஆட்டும்
.. அவலத்தை ரசிப்பானோ அறிவு ஜீவி
கலைவல்லார் குழுவுனிலே கலந்து கொள்ளக்
.. கடுகளவு பகுத்தறிவும் இல்லாம் கட்சித்
தலைவனுக்குத் தோல்கொடுப்பேன் என்று பேசும்
.. தமிழ்க் கொலைக்கும் தட்டும்கை! நகைப்பாய் நெஞ்சே!
படம்பிடித்தால் முகங்காட்ட பறந்து சென்று
.. பார்த்தாங்கே முதல்வரிசை அமர்ந்து கொள்ள
இடமில்லை எனத்தெரிந்தும் மேடை யுள்ள
.. எவருக்கோ தெரிந்தவர்போல் விரைந்து சென்றே
அடமாக அவரோடு பேசும் போக்கில்
.. அங்கேஒளிப் படத்தில்தான் விழுந்த பின்னே
குடத்தேனைக் குடித்த மகிழ்வோடு காணும்
.. குறுமதியோர் நடிப்புதனை நகைப்பாய் நெஞ்சே!
.. பார்த்தாங்கே முதல்வரிசை அமர்ந்து கொள்ள
இடமில்லை எனத்தெரிந்தும் மேடை யுள்ள
.. எவருக்கோ தெரிந்தவர்போல் விரைந்து சென்றே
அடமாக அவரோடு பேசும் போக்கில்
.. அங்கேஒளிப் படத்தில்தான் விழுந்த பின்னே
குடத்தேனைக் குடித்த மகிழ்வோடு காணும்
.. குறுமதியோர் நடிப்புதனை நகைப்பாய் நெஞ்சே!
No comments:
Post a Comment