இழப்பில் எழுந்த எண்ணம்
விரல்களுக்குக் கனமேற்றும் மோதிரங்கள்
.. விதவிதமாய்ச் செல்வந்தர் அணிவதுண்டு
குரலெடுத்துப் பேசுங்கால் கையை நீட்டி
.. குறிப்பாகப் பலர்கண்கள் மேய வைப்பார்
ஒருவிரலில் பலவாகா வாய்ச்சொற் கேற்ப
.. ஒயில்நடன அசைவுகளாய்க் கையோ டாடி
எரிகின்ற விளக்கொளியில் கற்கள் மின்ன
.. எழில்சேர மதிப்புறுவார் பொன்னால் அன்னார்!
.. விதவிதமாய்ச் செல்வந்தர் அணிவதுண்டு
குரலெடுத்துப் பேசுங்கால் கையை நீட்டி
.. குறிப்பாகப் பலர்கண்கள் மேய வைப்பார்
ஒருவிரலில் பலவாகா வாய்ச்சொற் கேற்ப
.. ஒயில்நடன அசைவுகளாய்க் கையோ டாடி
எரிகின்ற விளக்கொளியில் கற்கள் மின்ன
.. எழில்சேர மதிப்புறுவார் பொன்னால் அன்னார்!
பொன்னணிகள் ஏதுமின்றி இருந்தேன் ஏதும்
.. போடாமல் விரலியல்பாய் இருக்க விட்டேன்
என்றாலும் உணவள்ளும் விரலில் பொன்னின்
.. இலேசான உரசலினால் நன்மை என்றே
சொன்னவர்கள் சொற்கேட்டுச் சபலம் கொண்டேன்
.. சுத்ததங்க பஸ்பமுண்ண என்னால் ஆமா?
என்னயிது? இவ்வயதில் பொன்னாசையா?
.. எனையிடித்துத் துணைவியவள் மகிழ்ந்த துண்மை!
.. போடாமல் விரலியல்பாய் இருக்க விட்டேன்
என்றாலும் உணவள்ளும் விரலில் பொன்னின்
.. இலேசான உரசலினால் நன்மை என்றே
சொன்னவர்கள் சொற்கேட்டுச் சபலம் கொண்டேன்
.. சுத்ததங்க பஸ்பமுண்ண என்னால் ஆமா?
என்னயிது? இவ்வயதில் பொன்னாசையா?
.. எனையிடித்துத் துணைவியவள் மகிழ்ந்த துண்மை!
சென்றவாரம் மூன்றுதினம் காய்ச்சல் கண்டு
.. செயலொடுங்கி இருக்கவுடல் இளைத்த தாலே
என்விரலை விட்டுவிடு தலையாய்க் கீழே
.. எங்கேயோ தொலைந்(து)ஆழி வருத்தம் உண்மை!
அன்றாடம் காலைநடைப் பொழுதில் எங்கோ
.. அதுநழுவிப் போனதனால் இழப்பென்றாலும்
நன்றாமே ஓரேழைக் கண்டெடுத்தால்
.. நலிவுக்கும் மெலிவுக்கும் உதவும் தானே!
.. செயலொடுங்கி இருக்கவுடல் இளைத்த தாலே
என்விரலை விட்டுவிடு தலையாய்க் கீழே
.. எங்கேயோ தொலைந்(து)ஆழி வருத்தம் உண்மை!
அன்றாடம் காலைநடைப் பொழுதில் எங்கோ
.. அதுநழுவிப் போனதனால் இழப்பென்றாலும்
நன்றாமே ஓரேழைக் கண்டெடுத்தால்
.. நலிவுக்கும் மெலிவுக்கும் உதவும் தானே!
No comments:
Post a Comment