இல்லை
தொல்லையென நினைப்போர்க்குச் சொந்தம் இல்லை
.. தொலைவென்று தயங்குவோன்முன்னேறிச்செல்லான்!
இல்லையெனக் கிடப்போர்க் கெந்நாளும் தொல்லை
.. எதிர்பார்த்தே வாழ்வோர்க்கே மாற்றம் என்றும்
சொல்லளந்து பேசுவோர்க்குக் குழப்பம் இல்லை
.. சோர்ந்திருளில் அழுவோர்க்கு விடிவே இல்லை
வில்லுக்கு வளையாமல் வேகம் இல்லை
.. வீம்புக்கும் வெறுப்புக்கும் விவேகம் இல்லை!
.. தொலைவென்று தயங்குவோன்முன்னேறிச்செல்லான்!
இல்லையெனக் கிடப்போர்க் கெந்நாளும் தொல்லை
.. எதிர்பார்த்தே வாழ்வோர்க்கே மாற்றம் என்றும்
சொல்லளந்து பேசுவோர்க்குக் குழப்பம் இல்லை
.. சோர்ந்திருளில் அழுவோர்க்கு விடிவே இல்லை
வில்லுக்கு வளையாமல் வேகம் இல்லை
.. வீம்புக்கும் வெறுப்புக்கும் விவேகம் இல்லை!
தரைதொடுமுன் மழைத்துளிக்கு நிறமே இல்லை
.. தாங்குங்கோல் உளுத்துவிடின் பாழாம் பந்தல்
உரைப்பதிலே பொருளின்றேல் உளறல் ஆகும்
.. ஊமையென இருந்துவிடில் உண்மை பொய்யாம்
கரையிடுதல் காத்தலுக்கே அழகு மட்டும்
.. காட்டுவதானாலதுவும் ஓட்டைச் சட்டி
அரைகுறைகள் அடங்காமல் ஆர்பரித்தால்
.. அழகில்லை! அறிவீனம் ஆண்மை யாமோ?
.. தாங்குங்கோல் உளுத்துவிடின் பாழாம் பந்தல்
உரைப்பதிலே பொருளின்றேல் உளறல் ஆகும்
.. ஊமையென இருந்துவிடில் உண்மை பொய்யாம்
கரையிடுதல் காத்தலுக்கே அழகு மட்டும்
.. காட்டுவதானாலதுவும் ஓட்டைச் சட்டி
அரைகுறைகள் அடங்காமல் ஆர்பரித்தால்
.. அழகில்லை! அறிவீனம் ஆண்மை யாமோ?
முள்வேலி தனைத் தாண்டி ஓடும் ஆடு
.. முட்டியுடைபட்டதனை நினைத்தல் இல்லை
எள்ளில் நெய் நசுக்காமல் கிடைப்பதில்லை
.. எலும்பின்மேல் தசையின்றேல் உருவம் இல்லை
கள்ளுக்குப் போதையின்றேல் மதிப்பே இல்லை
.. கடமைக்குக் கையூட்டால் பெருமை இல்லை
தள்ளுபடி விலைப்பொருள்கள் தரத்தில் இல்லை
.. தகர்த்திடுதல் தீமையெனில் குற்றம் இல்லை!
.. முட்டியுடைபட்டதனை நினைத்தல் இல்லை
எள்ளில் நெய் நசுக்காமல் கிடைப்பதில்லை
.. எலும்பின்மேல் தசையின்றேல் உருவம் இல்லை
கள்ளுக்குப் போதையின்றேல் மதிப்பே இல்லை
.. கடமைக்குக் கையூட்டால் பெருமை இல்லை
தள்ளுபடி விலைப்பொருள்கள் தரத்தில் இல்லை
.. தகர்த்திடுதல் தீமையெனில் குற்றம் இல்லை!