Wednesday, November 28, 2012

ஒவ்வா நிலை

ஒவ்வா நிலை
 
வேர்களுக்கு நீரில்லாது
.. வெள்ளமெங்கே போச்சு?
வீணர்களும் கொள்ளையரும்
.. பகிர்ந்திடப் பாழாச்சு!
பார்பதவித் தேரினிலே
.. கொள்ளையிடும் வீச்சு!
படித்தவர்க்கும் பாமரர்க்கும்
.. பயம் நடுங்கும் மூச்சு!
 
வேண்டிநின்ற சுதந்திரத்தின்
.. விளைவு சிலர்க்கே உச்சம்!
விளம்பரத்தில் தான் வளர்ச்சி
.. ஏழைகண்ட மிச்சம்!
மீண்டுமொரு சுதந்திரப்போர்
.. வேண்டுமிந்த நாட்டை
மீட்டெடுத்துச் சமத்துவத்தேர்
.. ஓட்ட, வெற்றி நாட்ட!
 
சாதிமத பேதங்களும்
.. சதிச்செயலும் நாளும்
சகுனம் வாஸ்து சோதிடங்கள்
.. ஆருடங்கள் நீளும்!
ஓதுகின்ற அறிவியலுக்
.. கொவ்வா நிலை போலும்!
ஊழல்களே வேரழித்தால்
.. ஒழுக்கமென்று மீளும்?

No comments:

Post a Comment