Thursday, November 29, 2012

எண்ணத் துளிகள்

எண்ணத் துளிகள்
 
உறவைப் பெருக்கும் உணர்வில் சிறக்கும்
திறமே ஒழுங்கின் திடம்
 
திடத்தை உடல்கொண் டிருத்தலின் மேலாம்
நடத்தையில் சீர்மை நவில்
 
நவிலும் நலம்பல நாளும்மேற் சேர்ந்தும்
அவிக்கும் அழுக்கா(று) அறை
 
அறையில் ஒழுங்கின்மை அம்பலம் வந்தால்
இறைதடுத்தும் ஓங்கும் இழிவு
 
இழிவில் விழுந்தோரை இவ்வையம் தூற்றும்
ஒழியும் உளதும் உணர்
 
உணராதான் நூலறிவும் உண்மையில் வீணாம்
பிணத்துக்கும் உண்டோசொல் பீடு?
 
பீடில்லாப் பெற்றோர்க்கும் பிள்ளையால் பேறெனில்
நாடவரை வாழ்த்துதல் நன்று
 
நன்றெனினும் அன்றெனினும் நற்பண்பில் ஓங்கிடும்
அன்புடையார்க் கில்லை அவம்
 
அவமதிப்பை எண்ணி அகங்குன்றாப் பேதை
சவமென்றே சாற்றல் சரி
 
சரியாத் தடந்தான் சமநிலை காக்கும்
பரிவில் தவறிடின் பாழ்

No comments:

Post a Comment