பாடுகவே பாவேந்தர் பாட்டு
செஞ்சொல்லில் கவியின்பம் தரவே - புரட்சி
செய்தோரே பாவேந்தர் காப்பியங்கள் பெறவே
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - கவிதை
சாற்றுகிற தேனமுதே சத்துமிகு ஊறல்
நெஞ்சுணரப் புரட்சிக்கவி கூறல் - பெரும்
நெருப்பாகப் பகையழித்துத் தடுக்கும் எல்லை மீறல்
அஞ்சாத வீரத்தாய் காதை - அரசி
அழித்தனளே ஆய்ந்தறிந்தே அயலவரின் சூதை
செய்தோரே பாவேந்தர் காப்பியங்கள் பெறவே
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - கவிதை
சாற்றுகிற தேனமுதே சத்துமிகு ஊறல்
நெஞ்சுணரப் புரட்சிக்கவி கூறல் - பெரும்
நெருப்பாகப் பகையழித்துத் தடுக்கும் எல்லை மீறல்
அஞ்சாத வீரத்தாய் காதை - அரசி
அழித்தனளே ஆய்ந்தறிந்தே அயலவரின் சூதை
மாந்தோப்பில் மணங்கூட்டும் காதல் - ஒத்த
மனம்முறிக்கத் துணிந்தோரின் குணம் பணிந்தா சாதல்?
தீந்தமிழர் வாழ்வியலில் பெருமை - பாவாய்த்
தீட்டியதோர் ஓட்டநடைத் தெளிவெண்ணல் அருமை
ஏந்திவரும் தமிழுணர்வின் சாறு - யாப்பில்
ஏறிவர ஊறிடும்நா இனிக்குமெனக் கூறு
மாந்திடவே அமுதமென ஆறாய் - வேந்தர்
மணிக்கவிதை இனநலத்தின் வெள்ளமெனப் பாராய்
மனம்முறிக்கத் துணிந்தோரின் குணம் பணிந்தா சாதல்?
தீந்தமிழர் வாழ்வியலில் பெருமை - பாவாய்த்
தீட்டியதோர் ஓட்டநடைத் தெளிவெண்ணல் அருமை
ஏந்திவரும் தமிழுணர்வின் சாறு - யாப்பில்
ஏறிவர ஊறிடும்நா இனிக்குமெனக் கூறு
மாந்திடவே அமுதமென ஆறாய் - வேந்தர்
மணிக்கவிதை இனநலத்தின் வெள்ளமெனப் பாராய்
பெண்ணுக்கு நீதி சொல்ல வாசி - பெண்மை
பேணுவதும் போற்றுவதும் பெருமை என்றோசி
கண்ணிருந்தும் கைம்மை வரவேற்போர் - அவர்தம்
கற்றறிவை உற்றறிந்தும் யாரவரை ஏற்பார்?
மண்ணகத்தைத் தாயென்றே உரைப்பார் - குலத்தின்
மரபுதனை வளர்ப்பவனை மதியாமல் மிதிப்பார்
எண்ணற்ற வகையிழிவைச் செய்வார் - தம்மை
ஏலாது விழிப்புறவே ஏற்றிடடா கவிப்போர்!
பேணுவதும் போற்றுவதும் பெருமை என்றோசி
கண்ணிருந்தும் கைம்மை வரவேற்போர் - அவர்தம்
கற்றறிவை உற்றறிந்தும் யாரவரை ஏற்பார்?
மண்ணகத்தைத் தாயென்றே உரைப்பார் - குலத்தின்
மரபுதனை வளர்ப்பவனை மதியாமல் மிதிப்பார்
எண்ணற்ற வகையிழிவைச் செய்வார் - தம்மை
ஏலாது விழிப்புறவே ஏற்றிடடா கவிப்போர்!
No comments:
Post a Comment