முடிவில்லா மூடம்
நீரோட்டம் இல்லாமல் நிலத்தை நம்பி
.. நீள்துயரில் உழுதொழிலார் நலியும் போதில்
தேரோட்டம் தேவனுக்குத் தேவை என்று
.. தேதியிலே திருவாரூர்த் தெருக்கள் தோறும்
போராட்டம் நடத்துவதாய் காலம் நேரம்
.. பொசுக்குவதில் அரசியலில் கட்சி மோதல்!
வேரோட்டச் சிந்தனைகள் ஆழம் சென்றால்
.. விளைவுஆலின் விழுதுகளாய் மனிதம் தங்கும்!
.. நீள்துயரில் உழுதொழிலார் நலியும் போதில்
தேரோட்டம் தேவனுக்குத் தேவை என்று
.. தேதியிலே திருவாரூர்த் தெருக்கள் தோறும்
போராட்டம் நடத்துவதாய் காலம் நேரம்
.. பொசுக்குவதில் அரசியலில் கட்சி மோதல்!
வேரோட்டச் சிந்தனைகள் ஆழம் சென்றால்
.. விளைவுஆலின் விழுதுகளாய் மனிதம் தங்கும்!
பூனைஒன்று தன்னெதிரே குறுக்கே ஓட
.. புறப்பட்ட மனிதனவன் புத்தி கெட்டு
போனாலும் காரியங்கள் நடவாதென்று
.. பொசுக்கென்று தன்போக்கை மாற்றிக் கொள்வான்
ஆனைவரும் மணியோசை நல்லதென்பான்
.. அதுமதத்தால் ஓடிவந்தால் எதிர்செல்வானா?
பானையிலே தண்ணீர்க்கொண்டொருத்தி வந்தால்
.. பாழ்சகுனம் எனும்மனக்கூன் நாய்வால் தானா?
.. புறப்பட்ட மனிதனவன் புத்தி கெட்டு
போனாலும் காரியங்கள் நடவாதென்று
.. பொசுக்கென்று தன்போக்கை மாற்றிக் கொள்வான்
ஆனைவரும் மணியோசை நல்லதென்பான்
.. அதுமதத்தால் ஓடிவந்தால் எதிர்செல்வானா?
பானையிலே தண்ணீர்க்கொண்டொருத்தி வந்தால்
.. பாழ்சகுனம் எனும்மனக்கூன் நாய்வால் தானா?
ஆண்டவனின் பேர்பாடி ஒற்றைப் பார்ப்பான்
.. அவன்போக்கில் எதிர்வந்தால் சகுனம் தீதாம்!
மூண்டவஞ்ச நெஞ்சோடு நாட்டை ஏய்க்கும்
.. முனைப்புள்ள தலைவன்முன் போகலாமா?
தீண்டாதோர் நோண்டிவைத்த கிணற்று நீரும்
.. தீர்க்குந்தான் தாகத்தை! தொட்டால் தீட்டா?
பூண்டிஏரி வாஸ்துவழை அமைந்ததாலா
.. பொதுமக்கள் குடிநீராய்ச் சேறும் இங்கே?
.. அவன்போக்கில் எதிர்வந்தால் சகுனம் தீதாம்!
மூண்டவஞ்ச நெஞ்சோடு நாட்டை ஏய்க்கும்
.. முனைப்புள்ள தலைவன்முன் போகலாமா?
தீண்டாதோர் நோண்டிவைத்த கிணற்று நீரும்
.. தீர்க்குந்தான் தாகத்தை! தொட்டால் தீட்டா?
பூண்டிஏரி வாஸ்துவழை அமைந்ததாலா
.. பொதுமக்கள் குடிநீராய்ச் சேறும் இங்கே?