செம்மொழிக் கவியின்பம் - வாழ்த்தி யருள்க
நாவேந்திப் புலவரெலாம் நல்லறங்கள் மொழிவதனால்
.. நாடோறும் வளரும் தமிழே!
நஞ்சனையார் வஞ்சனையால் நலிவுறவே செய்தாலும்
.. நலம்பெருகித் திகழும் தமிழே!
.. நாடோறும் வளரும் தமிழே!
நஞ்சனையார் வஞ்சனையால் நலிவுறவே செய்தாலும்
.. நலம்பெருகித் திகழும் தமிழே!
மூவேந்தர் மூச்செனவே முத்தமிழாய் இத் தரணி
.. முழுமையுமாய் ஒளிர்ந்த தமிழே!
முறைதவறும் போதரசர் மூளையிலே தெளிவேற்ற
.. முன்புலவர் மொழிந்த தமிழே!
.. முழுமையுமாய் ஒளிர்ந்த தமிழே!
முறைதவறும் போதரசர் மூளையிலே தெளிவேற்ற
.. முன்புலவர் மொழிந்த தமிழே!
பூவேந்தும் தேனினிமை புகன்றிடுவோர் வாய்மொழியாய்ப்
.. புத்துணர்வைப் பொழியும் தமிழே!
புதுமைநலம் தினம்பெருக பழைமைவளம் மனம் குளிரப்
.. புவனமெலாம் உலவும் தமிழே!
.. புத்துணர்வைப் பொழியும் தமிழே!
புதுமைநலம் தினம்பெருக பழைமைவளம் மனம் குளிரப்
.. புவனமெலாம் உலவும் தமிழே!
பாவேந்தர் தன்மானப் பண்பாட்டுப் பாக்களினால்
.. பண்டைநிலை கண்ட தமிழே!
பண்படவே பயின்றிடுவோர் பாப்புனைவில் தேர்ச்சியுறப்
.. பற்றுடனே வாழ்த்தி யருளே!
.. பண்டைநிலை கண்ட தமிழே!
பண்படவே பயின்றிடுவோர் பாப்புனைவில் தேர்ச்சியுறப்
.. பற்றுடனே வாழ்த்தி யருளே!
No comments:
Post a Comment