செம்மொழிக் கவியின்பம் - செம்மொழிப் பொங்கல்
பூமிவிளை பொருள்களினால் பொலிவை ஏற்கும்
.. புத்தாண்டு தைமுதல்நாள் பொங்கல் வைப்போம்!
நாமுழைத்துப் பெறுமின்பம் நாட்டு மக்கள்
.. நலமுறவே செய்துமன நிறைவை ஏற்போம்!
தேமதுரத் தமிழொலியே விண்ணை முட்டி
.. திசையெங்கும் பொங்கலொலி எழுப்பிச் சேர்ந்து
பூமணத்துப் பொழிலிடையே இயற்கை யன்னைப்
.. புகழ்பாடி மகிழ்ச்சியிலே திளைப்போம் நாமே!
.. புத்தாண்டு தைமுதல்நாள் பொங்கல் வைப்போம்!
நாமுழைத்துப் பெறுமின்பம் நாட்டு மக்கள்
.. நலமுறவே செய்துமன நிறைவை ஏற்போம்!
தேமதுரத் தமிழொலியே விண்ணை முட்டி
.. திசையெங்கும் பொங்கலொலி எழுப்பிச் சேர்ந்து
பூமணத்துப் பொழிலிடையே இயற்கை யன்னைப்
.. புகழ்பாடி மகிழ்ச்சியிலே திளைப்போம் நாமே!
கதிரவனின் ஒளிவெப்பம் காற்று வானம்
.. கரத்தளிக்கும் அமுதமெனும் மழையும் ஓடும்
நதிநீரும் வெள்ளத்தைத் தேக்கும் ஏரி
.. நன்செயென்றும் புன்செயென்றும் உயிர்கள் வாழ
அதிவளங்கள் அளிக்கிற அன்னை பூமி
.. அகங்குளிர உழைப்பேற்கும் உழவர் வாழ்க!
கதிமாறிப் போயுலகில் எங்கோ வாழ்ந்தும்
.. கனித்தமிழர் மறவாப்பண் பாட்டுப் பொங்கல்!
.. கரத்தளிக்கும் அமுதமெனும் மழையும் ஓடும்
நதிநீரும் வெள்ளத்தைத் தேக்கும் ஏரி
.. நன்செயென்றும் புன்செயென்றும் உயிர்கள் வாழ
அதிவளங்கள் அளிக்கிற அன்னை பூமி
.. அகங்குளிர உழைப்பேற்கும் உழவர் வாழ்க!
கதிமாறிப் போயுலகில் எங்கோ வாழ்ந்தும்
.. கனித்தமிழர் மறவாப்பண் பாட்டுப் பொங்கல்!
மணம்காண இருக்கின்ற மக்கள் நெஞ்சில்
.. மலர்கின்ற கற்பனையில் மகிழ்ச்சிப் பொங்கல்
மணம்கொண்டோர் மருமருக்க ளாக மாறி
.. மறுவீட்டில் புது உறவில் அன்புப் பொங்கல்!
குணமுள்ள துணையோடு மனைய றத்தில்
.. குறைநிறைகள் தாண்டியேதம் மக்கள் சொந்தம்
இணங்கிவரும் நட்புடனே குலவும் பொங்கல்!
.. இனியகவி பொங்க உணர்வேற்றும் தானே!
.. மலர்கின்ற கற்பனையில் மகிழ்ச்சிப் பொங்கல்
மணம்கொண்டோர் மருமருக்க ளாக மாறி
.. மறுவீட்டில் புது உறவில் அன்புப் பொங்கல்!
குணமுள்ள துணையோடு மனைய றத்தில்
.. குறைநிறைகள் தாண்டியேதம் மக்கள் சொந்தம்
இணங்கிவரும் நட்புடனே குலவும் பொங்கல்!
.. இனியகவி பொங்க உணர்வேற்றும் தானே!
சிந்தைநலச் சிறப்புடையோர் மாட்டுப் பொங்கல்!
.. செந்தமிழைச் செம்மொழியாய்க் காணும் பொங்கல்!
சொந்த இனம் நாடுநலம் செழிக்கத் தொண்டு
.. சோர்வின்றிச் செய்தவர்க்கு வெற்றிப் பொங்கல்!
நந்தமிழர் ஆட்சிமுறை பெரியார் கொள்கை
.. நம்மறிஞர் அண்ணாவின் தடத்தில் சென்று
இந்தியநா டிதற்கேற்ற எடுத்துக் காட்டாய்
.. இயங்கிடநாம் பெருமிதத்தில் பொங்கு வோமே!
.. செந்தமிழைச் செம்மொழியாய்க் காணும் பொங்கல்!
சொந்த இனம் நாடுநலம் செழிக்கத் தொண்டு
.. சோர்வின்றிச் செய்தவர்க்கு வெற்றிப் பொங்கல்!
நந்தமிழர் ஆட்சிமுறை பெரியார் கொள்கை
.. நம்மறிஞர் அண்ணாவின் தடத்தில் சென்று
இந்தியநா டிதற்கேற்ற எடுத்துக் காட்டாய்
.. இயங்கிடநாம் பெருமிதத்தில் பொங்கு வோமே!
No comments:
Post a Comment