செம்மொழிக் கவியின்பம் - தாய்ப்பால்
தன்னினத்தைத் சாய்ப்பதற்கு வெட்டுக் கத்தி
.. தன்பிடியாய் அதேமரத்துக் கிளையின் கொம்பு
தன்மொழியைச் சிதைப்பதற்குச் சிலர் துணிந்து
.. தகுதியிலாப் புனைவுகளைப் புதுமை என்பார்!
அன்னியரின் மொழிச்சொற்கள் திணித்து வைப்பார்;
.. அவியலுக்குக் கவிதையெனும் பெயரும் சூட்டிப்
புன்னகைப்பார்! பொன்னைவிட மின்னும் போலி
.. புதுமெருகும் ஒதுங்கிவிடச் சிரிக்கும் உண்மை!
.. தன்பிடியாய் அதேமரத்துக் கிளையின் கொம்பு
தன்மொழியைச் சிதைப்பதற்குச் சிலர் துணிந்து
.. தகுதியிலாப் புனைவுகளைப் புதுமை என்பார்!
அன்னியரின் மொழிச்சொற்கள் திணித்து வைப்பார்;
.. அவியலுக்குக் கவிதையெனும் பெயரும் சூட்டிப்
புன்னகைப்பார்! பொன்னைவிட மின்னும் போலி
.. புதுமெருகும் ஒதுங்கிவிடச் சிரிக்கும் உண்மை!
வெண்திரையில் கரும்புள்ளி கவனம் ஈர்க்கும்!
.. வெண்மதிமேல் குவிமேகம் வெளிச்சந் தின்னும்!
புண்சீழாம் செங்குருதிச் சீர்கேட் டாலே
.. புரையோடும் பெருங்குற்றம் புடைத்து வீழ்த்தும்!
கண்ணைப்பொய் மயக்குவதைப் பழக்கம் நீக்கும்!
.. கனிச்சுவையில் காரமிட்டுச் சுவைப்பார் உண்டோ?
பண்ணிசையே பாடுபொருள் மாற்று மானால்
.. பாழாகும் பாடலுடன் படைத்தோன் பேரும்!
.. வெண்மதிமேல் குவிமேகம் வெளிச்சந் தின்னும்!
புண்சீழாம் செங்குருதிச் சீர்கேட் டாலே
.. புரையோடும் பெருங்குற்றம் புடைத்து வீழ்த்தும்!
கண்ணைப்பொய் மயக்குவதைப் பழக்கம் நீக்கும்!
.. கனிச்சுவையில் காரமிட்டுச் சுவைப்பார் உண்டோ?
பண்ணிசையே பாடுபொருள் மாற்று மானால்
.. பாழாகும் பாடலுடன் படைத்தோன் பேரும்!
வண்ணங்கள் ஓவியத்தின் பொலிவைக் கூட்டும்
.. வளர்கவிதை உணர்வுகளின் தெளிவைக் காட்டும்
எண்ணங்கள் பிறமொழியின் சொற்கூட்டங்கள்
.. என்றானால் பலவீட்டுப் பிச்சைச் சோறே!
விண்ணூற்றாம் மழைநீரின் வெள்ளந்தன்னில்
.. விழிமிடத்தின் மண்நிறமும் சுவையும் சேரும்!
தண்டமிழ்த் தாய் மொழிப்பாலில் கலப்பைச் சேர்ப்போர்
.. தம்சேய்க்கு நோய்சேர்க்கத் தயங்கா தோரே!
.. வளர்கவிதை உணர்வுகளின் தெளிவைக் காட்டும்
எண்ணங்கள் பிறமொழியின் சொற்கூட்டங்கள்
.. என்றானால் பலவீட்டுப் பிச்சைச் சோறே!
விண்ணூற்றாம் மழைநீரின் வெள்ளந்தன்னில்
.. விழிமிடத்தின் மண்நிறமும் சுவையும் சேரும்!
தண்டமிழ்த் தாய் மொழிப்பாலில் கலப்பைச் சேர்ப்போர்
.. தம்சேய்க்கு நோய்சேர்க்கத் தயங்கா தோரே!
No comments:
Post a Comment