ஒரு தாயின் வாழ்த்து
அழுதுகொண்டே பிறந்தாய் பெற்றோர் நெஞ்சில்
.. அமுதமழைப் பொழிந்தெம்மைச் சிரிக்க வைத்தாய்!
உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே
.. உவப்புறுமந் நிலையிலவர் உள்ளம் பொங்க
பொழுதெல்லாம் மணக்கின்ற பூவாய் வந்தாய்!
.. பூமிபெற்ற பொன்பொருள் எல்லாமுங் கூட
குழந்தையுனக் கீடாகக் கூறப் போமா?
.. குலக்கொடிநீ முழுநிலவுக் கொடி தந்தாயோ?
.. அமுதமழைப் பொழிந்தெம்மைச் சிரிக்க வைத்தாய்!
உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே
.. உவப்புறுமந் நிலையிலவர் உள்ளம் பொங்க
பொழுதெல்லாம் மணக்கின்ற பூவாய் வந்தாய்!
.. பூமிபெற்ற பொன்பொருள் எல்லாமுங் கூட
குழந்தையுனக் கீடாகக் கூறப் போமா?
.. குலக்கொடிநீ முழுநிலவுக் கொடி தந்தாயோ?
தவழ்ந்தெழுந்து தடுமாறித் தத்தித் தத்தித்
.. தாய்மடியில் விழுந்து அவளின் தாடை தட்ட
புவனமிதையே பெற்ற பூரிப்புற்றேன்
.. பூங்கையின் விரல்விரித்துப் பொத்து வாய்வாய்
கவனமுடன் கேட்பதுபோல் கண்கள் பூத்துக்
.. காதுமடல் விரித்தென்றன் கொஞ்சல் கேட்பாய்
அவனியிலே நான் தாயாய் உயர்வை யுற்றேன்
.. அருங்குழவி மழலைத்தேன் அமுதைப் பெற்றேன்!
.. தாய்மடியில் விழுந்து அவளின் தாடை தட்ட
புவனமிதையே பெற்ற பூரிப்புற்றேன்
.. பூங்கையின் விரல்விரித்துப் பொத்து வாய்வாய்
கவனமுடன் கேட்பதுபோல் கண்கள் பூத்துக்
.. காதுமடல் விரித்தென்றன் கொஞ்சல் கேட்பாய்
அவனியிலே நான் தாயாய் உயர்வை யுற்றேன்
.. அருங்குழவி மழலைத்தேன் அமுதைப் பெற்றேன்!
தாய்மண்ணின் தனிப்பெருமை யாவும் காக்கும்
.. தகுதிகளில் தக்கபடிப் பயிற்சி ஏற்கும்
வாய்ப்புனக்குத் தருகின்ற சூழல் இங்கே
.. வளர்ந்திருக்க வேண்டுமதை நல்லோர் செய்வார்
போயெங்கும் பொருள்தேடி அலையாமல் நீ
.. பொன்னாடாய் உள்நாட்டை முன்னேற்றத்தான்
நோய்நொடிகள் அண்டாமல் காப்பேன் உன்றன்
.. நுண்ணறிவால் வழிகாட்டியாக வாழ்க!
.. தகுதிகளில் தக்கபடிப் பயிற்சி ஏற்கும்
வாய்ப்புனக்குத் தருகின்ற சூழல் இங்கே
.. வளர்ந்திருக்க வேண்டுமதை நல்லோர் செய்வார்
போயெங்கும் பொருள்தேடி அலையாமல் நீ
.. பொன்னாடாய் உள்நாட்டை முன்னேற்றத்தான்
நோய்நொடிகள் அண்டாமல் காப்பேன் உன்றன்
.. நுண்ணறிவால் வழிகாட்டியாக வாழ்க!
விண்ணுலவும் கதிர்நிலவு காற்று மேகம்
.. விளைவிக்கும் செடிகொடிகள் மரங்கள் குன்றம்
மண்ணகத்தை வளமாக்கும் ஏரி ஆறு
.. மண்டியுள செழிப்பெல்லாம் பொதுமை யாகும்
கண்டிப்பாய் வருங்காலம் பிறந்தோர் யாரும்
.. கடுமுழைப்பின் பலன்கண்டு வாழ்வர் என்னும்
உண்மைநிலை யுருவாகக் குழந்தை நீயும்
.. உத்தமனாய்ப் பிறர்க்குதவ உயர்ந்தே வாழ்க!
.. விளைவிக்கும் செடிகொடிகள் மரங்கள் குன்றம்
மண்ணகத்தை வளமாக்கும் ஏரி ஆறு
.. மண்டியுள செழிப்பெல்லாம் பொதுமை யாகும்
கண்டிப்பாய் வருங்காலம் பிறந்தோர் யாரும்
.. கடுமுழைப்பின் பலன்கண்டு வாழ்வர் என்னும்
உண்மைநிலை யுருவாகக் குழந்தை நீயும்
.. உத்தமனாய்ப் பிறர்க்குதவ உயர்ந்தே வாழ்க!
No comments:
Post a Comment