நாம் செய்வோமா?
சிறப்புற்றோர் சிந்தனையைச் செயல்படுத்தச்
.. சிலரேனும் வாய்ப்பந்தல் தவிர்த்துழைத்தால்
அறப்பணியாய் அறிவார்ந்த தொண்டாய் ஓங்கும்
.. அவர்வழியே சிலரேனும் உண்மையான
திறத்தோடும் மறத்தோடும் உணர்வினோடும்
.. திருப்பங்கள் காண்பதற்கு விருப்பம் கொள்வோம்
மறக்க முடியாதபடி மாந்தர் நேயம்
.. மலர்வதற்கு மனம் கொண்டு நாம்வாழ்வோமே!
.. சிலரேனும் வாய்ப்பந்தல் தவிர்த்துழைத்தால்
அறப்பணியாய் அறிவார்ந்த தொண்டாய் ஓங்கும்
.. அவர்வழியே சிலரேனும் உண்மையான
திறத்தோடும் மறத்தோடும் உணர்வினோடும்
.. திருப்பங்கள் காண்பதற்கு விருப்பம் கொள்வோம்
மறக்க முடியாதபடி மாந்தர் நேயம்
.. மலர்வதற்கு மனம் கொண்டு நாம்வாழ்வோமே!
புயல்வேகத்துடன் பெருமை பேசிக்கொண்டே
.. புறநானூற்றுக்காலம் புதுக்குவோமோ?
அயலவனை விஞ்சிய நம் அறிவைப் பற்றி
.. ஆர்ப்பரித்துப் பேசியிங்கே ஆனதென்ன?
செயல்மறந்து வாழ்த்திகொண்டிருக்கத்தானா
.. சிறந்தபணியாற்றியேநம் முன்னோர் சென்றார்?
வயல்கண்ட செழுமையெலாம் எங்கே காணோம்?
.. வளர்கின்ற வரலாற்றை வடிப்போமா நாம்?
.. புறநானூற்றுக்காலம் புதுக்குவோமோ?
அயலவனை விஞ்சிய நம் அறிவைப் பற்றி
.. ஆர்ப்பரித்துப் பேசியிங்கே ஆனதென்ன?
செயல்மறந்து வாழ்த்திகொண்டிருக்கத்தானா
.. சிறந்தபணியாற்றியேநம் முன்னோர் சென்றார்?
வயல்கண்ட செழுமையெலாம் எங்கே காணோம்?
.. வளர்கின்ற வரலாற்றை வடிப்போமா நாம்?
பாரதிக்கு விழாவெடுத்துப் புகழைச் சேர்ப்போம்
.. பாரதியின் கவியை மனப்பாடம் செய்வோம்
பேருரத்துக் கூவியே நம் மூச்சே என்போம்
.. பெருமைகளை முத்தமிழில் மொய்க்கச் செய்வோம்
பாரதியின் சீர்திருத்தக் கொள்கை தம்மைப்
.. பயன்பாட்டு நடைமுறைக்குக் காட்டி வாழ்வோர்
ஊருக்குள் பெருகியுள்ளார் எனும்கணக்கின்
.. உண்மைநிலை உயர்ந்திடவே செய்வோமா நாம்?
.. பாரதியின் கவியை மனப்பாடம் செய்வோம்
பேருரத்துக் கூவியே நம் மூச்சே என்போம்
.. பெருமைகளை முத்தமிழில் மொய்க்கச் செய்வோம்
பாரதியின் சீர்திருத்தக் கொள்கை தம்மைப்
.. பயன்பாட்டு நடைமுறைக்குக் காட்டி வாழ்வோர்
ஊருக்குள் பெருகியுள்ளார் எனும்கணக்கின்
.. உண்மைநிலை உயர்ந்திடவே செய்வோமா நாம்?
No comments:
Post a Comment