Tuesday, September 4, 2012

நஞ்சும் எனக்கமுதம்!


நஞ்சும் எனக்கமுதம்!
 
தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
தீயில் என்னை வாட்டிடவோ என்னைத் தொட்டாய்?
நெஞ்சத்தில் நீயிட்ட நஞ்சும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ நிற்பதை ஏன் மறந்துவிட்டாய்?
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
 
என்னை இருள் சூழ்ந்திடவோ
.. எங்கோ சென்றாய்? - நீ
இருட்டினிலே குருடனைத்தான்
.. ஏங்க விட்டாய்
என் மனத்தில் வாழ்ந்திடவோ
.. உறவைக் கொண்டாய்? - அடி
இறந்தவன் மேல் இடி போட்டு
.. நீதான் கெட்டாய்
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
 
நீயும் நானும் சேர்ந்திருந்த
.. நேரம் கொஞ்சம் - உன்னைத்
தேன் நிலவென்றேன் - நீயோ
.. பாழிருளில் தள்ளிவிட்டாய்!
 
பாயுமின்பப் பௌர்ணமிக் கேன்
.. என்மேல் வஞ்சம்? - அடி
பகலினிலும் கனவுலகில் தவிக்க விட்டாய்
.. நெஞ்சத்தில் நீயிட்ட நஞ்சும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ நிற்பதை ஏன் மறந்து விட்டாய்?
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?

No comments:

Post a Comment