ஏனடி ஏன்?
மெழுகே அழியவோ நீ பிறந்தாய்? - அன்பே
அற்றவர் யாருக்கோ மனம் திறந்தாய்
விதியே அழகென ஏற்றிருந்தாய்? - நேரம்
வேடமாய் மாறுமே ஏன் மறந்தாய்?
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
அற்றவர் யாருக்கோ மனம் திறந்தாய்
விதியே அழகென ஏற்றிருந்தாய்? - நேரம்
வேடமாய் மாறுமே ஏன் மறந்தாய்?
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
நெருப்பை உறவாடிக் கொண்டிருந்தாய் - உன்னை
நெருங்கிட ஆவியை நீ துறந்தாய்
விருப்பம் ஒளிவிட நீ உயர்ந்தாய் - அந்த
வேதனை கரைத்திட நீ சிறந்தாய்
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
நெருங்கிட ஆவியை நீ துறந்தாய்
விருப்பம் ஒளிவிட நீ உயர்ந்தாய் - அந்த
வேதனை கரைத்திட நீ சிறந்தாய்
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
முற்றுமாய் உயிர்த்திரி ஒளிர்ந்திடவே - உன்னை
முற்றுகை யிட்டிட நீ பறந்தாய்
சத்தியம் அவனுக்காய்க் காத்திருந்தாய் - இந்தச்
சரித்திரம் வளரவோ நீ கரைந்தாய்!
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
முற்றுகை யிட்டிட நீ பறந்தாய்
சத்தியம் அவனுக்காய்க் காத்திருந்தாய் - இந்தச்
சரித்திரம் வளரவோ நீ கரைந்தாய்!
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
No comments:
Post a Comment