Wednesday, September 5, 2012

நெகிழ்வு

நெகிழ்வு
 
எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ - மனம்
ஏனென்று புரியாமல் துடிக்கின்றதோ?
மதிவிதிக்கின்றதோ?
எது சிதைக்கின்றதோ? - இங்கே
வேடமிட்டே எல்லாமும் நடிக்கின்றதோ?
- எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ?
 
மலை கொண்ட கல்லெல்லாம்
சிலை செய்யவோ? - உன்றன்
மனம் எண்ணும் எல்லாமும் முடிகின்றதோ?
இலைகூட பூஜைக்கு ஏற்கின்றதே - பூத்து
இருந்தாலும் சில வீணாய் மடிகின்றதே!
 
மரம் விட்ட காயெல்லாம் கனியாகுமோ? - அவை
மண்ணுக்குள் விதையாகிச் செடியாகுமோ?
விரல் ஐந்தும் ஒருகையில் பல தோற்றமே - அந்த
வேஏறுமை பொருள்பற்றும் பிடிமாற்றுமா?
 
மதி விதிக்கின்றதொ?
எது சிதைக்கின்றதோ? - இங்கே
வேடமிட்டே எல்லாமும் நடக்கின்றதோ?
- எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ?

No comments:

Post a Comment