மறப்பார் யாரோ?
நாடுகாக்க வந்தவராய் வரலாற் றேட்டில்
.. நாம்காணும் தலைவர்தாம் உண்மைக் கொள்கைப்
பீடுடனே மக்களுக்குப் பணியை ஆற்றிப்
.. பெருமையடைந்தவராகச் சொல்லப் போமோ?
காடுமேடு வளைத்தவற்றைக் காத்துக் கொள்ள
.. கட்சிஒன்றை பற்றி நிற்கக் காண்கின்றோமே!
கூடிநிற்கும் தொண்டருக்குக் கையசைப்பே
.. குதூகலத்தைக் கொடுக்குமென்ப தவரின் கொள்கை!
.. நாம்காணும் தலைவர்தாம் உண்மைக் கொள்கைப்
பீடுடனே மக்களுக்குப் பணியை ஆற்றிப்
.. பெருமையடைந்தவராகச் சொல்லப் போமோ?
காடுமேடு வளைத்தவற்றைக் காத்துக் கொள்ள
.. கட்சிஒன்றை பற்றி நிற்கக் காண்கின்றோமே!
கூடிநிற்கும் தொண்டருக்குக் கையசைப்பே
.. குதூகலத்தைக் கொடுக்குமென்ப தவரின் கொள்கை!
சிந்திக்கும் பழக்கமின்றிச் சினமடக்கிச்
.. சீரழியும் பாட்டாளிக் கூட்டம் என்றும்
வந்தனை செய்தேவாடும் அவலம் தீர்க்க
.. வழிகாட்டி முன்நடந்து மாற்றம் கண்ட
அந்தவர லாறெல்லாம் காந்தி காலம்
.. அதன்பின்னெ வந்ததேசபச்சோந்திக் கோலம்
மந்தைகளாய் இருப்பவர்க்கு வந்து சேரும்
.. மரியாதை ஐந்தாண்டுக் கொருநாள் தானே!
.. சீரழியும் பாட்டாளிக் கூட்டம் என்றும்
வந்தனை செய்தேவாடும் அவலம் தீர்க்க
.. வழிகாட்டி முன்நடந்து மாற்றம் கண்ட
அந்தவர லாறெல்லாம் காந்தி காலம்
.. அதன்பின்னெ வந்ததேசபச்சோந்திக் கோலம்
மந்தைகளாய் இருப்பவர்க்கு வந்து சேரும்
.. மரியாதை ஐந்தாண்டுக் கொருநாள் தானே!
எப்படியோ சிலநாள்கள் பசியைப் போக்கி
.. இருந்திடவும் வழிவாய்த்த தென்று தானே
தப்பேன்றோ சரியென்றோ வாக்கை விற்கும்
.. தராளம் வறியவரின் நெஞ்சில் ஊறும்
அப்படியே அவர்வாழ்க்கை இருந்தால் தானே
.. அடுத்தமுறை பதவித்தேர் ஏறிப்போவார்
இப்படியே எந்நாட்டில் குடிகள் ஆட்சி
.. இருக்கின்ற தெனும் வியப்பில் அதிர்ச்சி யுண்டோ?
.. இருந்திடவும் வழிவாய்த்த தென்று தானே
தப்பேன்றோ சரியென்றோ வாக்கை விற்கும்
.. தராளம் வறியவரின் நெஞ்சில் ஊறும்
அப்படியே அவர்வாழ்க்கை இருந்தால் தானே
.. அடுத்தமுறை பதவித்தேர் ஏறிப்போவார்
இப்படியே எந்நாட்டில் குடிகள் ஆட்சி
.. இருக்கின்ற தெனும் வியப்பில் அதிர்ச்சி யுண்டோ?
No comments:
Post a Comment