நாள் என் செய்யும்?
மானத்தைப் பெரிதாக மதித்த காலம்
.. மலர்ந்திடுமா மீண்டுமெனும் எதிர்பார்ப் பேக்கம்
போனதையே பெருமையாகப் பேசிக் கோன்டு
.. பொழுதோட்டும் போக்கினிலா புதுமை பூக்கும்?
ஏன்நாமும் முன்னைவிட சிறப்புற் றோங்கி
.. இருக்கின்றோம் அறிவியலில் பெருமை தானே?
ஊன்பொதிக்கா உயிர்பெற்றோம்? ஊருக்கென்றும்
.. ஒருநன்மை செய்யாக்கால் நாளென் செய்யும்?
.. மலர்ந்திடுமா மீண்டுமெனும் எதிர்பார்ப் பேக்கம்
போனதையே பெருமையாகப் பேசிக் கோன்டு
.. பொழுதோட்டும் போக்கினிலா புதுமை பூக்கும்?
ஏன்நாமும் முன்னைவிட சிறப்புற் றோங்கி
.. இருக்கின்றோம் அறிவியலில் பெருமை தானே?
ஊன்பொதிக்கா உயிர்பெற்றோம்? ஊருக்கென்றும்
.. ஒருநன்மை செய்யாக்கால் நாளென் செய்யும்?
மனம் பெருத்தோர் வாழ்ந்திருந்த காலம் அன்று!
.. மாசாசை மலைபோன்று வளரவில்லை
பணம்பெருத்தோர் பேராசைப் பெருக்கினாலே
.. பஞ்சையரின் உயிர்வாழ்வு பாழாய்ப் போகக்
குணம்கொண்டோம் தாம்மட்டும் பதுங்கிக் கொள்ள
.. குற்றங்கள் திறமைகளாய் மதிக்கும் போக்கில்
கணத்துக்குக் கணமழிவில் உலகம் சாயக்
.. கடனாற்றும் கருத்தின்றேல் நாளென் செய்யும்?
.. மாசாசை மலைபோன்று வளரவில்லை
பணம்பெருத்தோர் பேராசைப் பெருக்கினாலே
.. பஞ்சையரின் உயிர்வாழ்வு பாழாய்ப் போகக்
குணம்கொண்டோம் தாம்மட்டும் பதுங்கிக் கொள்ள
.. குற்றங்கள் திறமைகளாய் மதிக்கும் போக்கில்
கணத்துக்குக் கணமழிவில் உலகம் சாயக்
.. கடனாற்றும் கருத்தின்றேல் நாளென் செய்யும்?
இந்தநாளில் நம்வாழ்க்கை முறைதான் நன்றா?
.. இதைஎண்ணிப் பின்வருவோர் போற்றுவோரா?
சொந்தபந்தம் சுகதுக்கம் பொதுவே யார்க்கும்!
.. சுயநலத்தைப் பெரிதாக எண்ணாச் சாறோர்
எந்தநாளில் வாழ்ந்தாலும் வரலாறாவார்!
.. எல்லாமும் தமக்கென்பார் இழிந்தே சாவார்!
வந்தவழி எனும்நினைப்பே வீண்நாள் ஆக்கும்
.. வாழ்வித்து வாழ்கின்ற நாளே நன்னாள்!
.. இதைஎண்ணிப் பின்வருவோர் போற்றுவோரா?
சொந்தபந்தம் சுகதுக்கம் பொதுவே யார்க்கும்!
.. சுயநலத்தைப் பெரிதாக எண்ணாச் சாறோர்
எந்தநாளில் வாழ்ந்தாலும் வரலாறாவார்!
.. எல்லாமும் தமக்கென்பார் இழிந்தே சாவார்!
வந்தவழி எனும்நினைப்பே வீண்நாள் ஆக்கும்
.. வாழ்வித்து வாழ்கின்ற நாளே நன்னாள்!
No comments:
Post a Comment