செய்வாயா?
ஆங்கிலேயர்க் கடிமையாக இருந்த நாளில்
.. ஆர்வமுடன் இளைஞரணி தலைவர் பின்னே
ஓங்கியபே ருணர்வோடு கிளர்ந்தெழுந்தார்
.. ஒன்றுபட்டு நாட்டுரிமைக்காக நின்றார்!
நீங்கியதே அடிமைவாழ்வே எனுங்கொண்டாட்டம்
.. நீடிக்கும் நிலையுளதா? ஏழைவாழ்வுக்(கு)
ஏங்குகிறார் கொள்ளையராய்ச் சொந்த நாட்டார்
.. ஏய்ப்பூழல் கொடுஞ்சுரண்டல் தொடர்கின்றாரே!
.. ஆர்வமுடன் இளைஞரணி தலைவர் பின்னே
ஓங்கியபே ருணர்வோடு கிளர்ந்தெழுந்தார்
.. ஒன்றுபட்டு நாட்டுரிமைக்காக நின்றார்!
நீங்கியதே அடிமைவாழ்வே எனுங்கொண்டாட்டம்
.. நீடிக்கும் நிலையுளதா? ஏழைவாழ்வுக்(கு)
ஏங்குகிறார் கொள்ளையராய்ச் சொந்த நாட்டார்
.. ஏய்ப்பூழல் கொடுஞ்சுரண்டல் தொடர்கின்றாரே!
திரைப்படங்கள் மிகைப்படுத்தும் ஆட்டம் பாட்டம்
.. திசைமாற்றி வைக்க இங்கே ஒழுக்கம் ஓட்டம்
நரைமறைத்து நடிகனவன் இளையபெண்ணை
.. நளினமின்றித் தீண்டிவிளையாடக்கண்டு
முறைதவறி நடப்பதற்கு துறுதுறுக்கும்
.. மூளையில்லார் கூட்டத்தில் இளைஞர் முந்தி!
குறைகண்டால் சீற்றமுடன் களைவதற்குக்
.. கூரறிவின் செயல்திறனைக் காட்டுவாயா?
.. திசைமாற்றி வைக்க இங்கே ஒழுக்கம் ஓட்டம்
நரைமறைத்து நடிகனவன் இளையபெண்ணை
.. நளினமின்றித் தீண்டிவிளையாடக்கண்டு
முறைதவறி நடப்பதற்கு துறுதுறுக்கும்
.. மூளையில்லார் கூட்டத்தில் இளைஞர் முந்தி!
குறைகண்டால் சீற்றமுடன் களைவதற்குக்
.. கூரறிவின் செயல்திறனைக் காட்டுவாயா?
பெற்றவர்கள் கற்றவனாய்ப் பொலிவுண்டாக்கப்
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற்றானும்
பற்றுமொழி நாட்டின்முன்னேற்றம் என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பாயா நீ?
முற்றுமிந்த நாடுனைப்போல் இளைஞர் தம்மை
.. முன்னிறுத்தி முன்னேற வழிகாண்பாயா?
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற்றானும்
பற்றுமொழி நாட்டின்முன்னேற்றம் என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பாயா நீ?
முற்றுமிந்த நாடுனைப்போல் இளைஞர் தம்மை
.. முன்னிறுத்தி முன்னேற வழிகாண்பாயா?
No comments:
Post a Comment