Monday, September 3, 2012

ஒற்றைக் குயிலே...

ஒற்றைக் குயிலே...
 
ஒற்றைக் குயிலே பாடாயோ? - உன்றன்
உயிர்த்துணை எங்கே தேடாயோ?
 
உள்ளம் கவரும் உன் பாடல் எல்லாம் ஒழிந்ததோ?
இன்பம் நாடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
தென்றலே மென்மையை ஏன் பகைத்தாய்? - வண்ணத்
தேன்மலர் நீயுமே கூடாயோ?
தீயுடன் பஞ்சுக்கு ஏன் உறவு? - உன்
துயருக்கு விடிவெது தேடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
வெண்ணிலா விஷத்தைச் சிந்துவதேன்? - என்றன்
வேதனை கூறிட ஓடாயோ?
கண்ணிலார் வண்ணங்கள் அறியாரே - நெஞ்சு
கனவிலும் அமைதியைக் கூடாதோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?

No comments:

Post a Comment