காலம் வருமா?
இயல்பாகப் பழுக்காத ஒன்றை நாமும்
.. இறுக்கியதை முன்னதாகப் பழுக்க வைக்கச்
செயற்கையிலே பலவந்தப் படுத்தும் போது
.. சேராது சத்தோடு சாறும் நன்றாய்!
சுயமாக அறிகின்ற சொந்த புத்தி
.. சொலக்கேட்டுத் தெரிந்தொள்வதற்கும் மேல்தான்!
முயலாமல் வெற்றிமுடி எட்டல் இல்லை!
.. முன்னேற்றம் இயல்பென்றால் மகிழ்ச்சி எல்லை!
.. இறுக்கியதை முன்னதாகப் பழுக்க வைக்கச்
செயற்கையிலே பலவந்தப் படுத்தும் போது
.. சேராது சத்தோடு சாறும் நன்றாய்!
சுயமாக அறிகின்ற சொந்த புத்தி
.. சொலக்கேட்டுத் தெரிந்தொள்வதற்கும் மேல்தான்!
முயலாமல் வெற்றிமுடி எட்டல் இல்லை!
.. முன்னேற்றம் இயல்பென்றால் மகிழ்ச்சி எல்லை!
முதிர்காலப் பக்குவத்தில் கதிர் அறுப்பார்
.. முற்றிவிட்டால் உதிர்ந்துவிடும் உழைப்பின் வெற்றி!
எதிர்நோக்கும் காலத்தில் தெளிவு தேவை
.. என்றாலும் புதிராகச் சரிவும் நேரும்!
நதிநீர்போல் திரும்பாமல் ஓடும் காலம்
.. நழுவவிட்டுத் திகைப்போரை நலிவில் ஆழ்த்தும்
விதிமுறைகள் மீறாமல் விரையும் காலம்
.. வீணாகப் போக்காத விவேகம் நன்று!
.. முற்றிவிட்டால் உதிர்ந்துவிடும் உழைப்பின் வெற்றி!
எதிர்நோக்கும் காலத்தில் தெளிவு தேவை
.. என்றாலும் புதிராகச் சரிவும் நேரும்!
நதிநீர்போல் திரும்பாமல் ஓடும் காலம்
.. நழுவவிட்டுத் திகைப்போரை நலிவில் ஆழ்த்தும்
விதிமுறைகள் மீறாமல் விரையும் காலம்
.. வீணாகப் போக்காத விவேகம் நன்று!
மனிதநிலை மாறவைக்கும் எண்ணம் யாவும்
.. மண்ணாகப் போகவேண்டும் இருக்கும் ஒன்றின்
புனிதத்தை இழிவாக்கும் புத்தி சக்தி
.. பொசுங்கியவை சாம்பலாகி மறைய வேண்டும்!
இனிப்பாகவே பேசி இழிவைச் சேர்ப்போர்
.. இல்லையென்னும் நிலை எல்லாத் துறையும் வேண்டும்!
தனியொருவன் தலைநிமிர்ந்து வாழும் தன்மை
.. தரத்தோடு நிலவவரும் காலம் என்றோ?
.. மண்ணாகப் போகவேண்டும் இருக்கும் ஒன்றின்
புனிதத்தை இழிவாக்கும் புத்தி சக்தி
.. பொசுங்கியவை சாம்பலாகி மறைய வேண்டும்!
இனிப்பாகவே பேசி இழிவைச் சேர்ப்போர்
.. இல்லையென்னும் நிலை எல்லாத் துறையும் வேண்டும்!
தனியொருவன் தலைநிமிர்ந்து வாழும் தன்மை
.. தரத்தோடு நிலவவரும் காலம் என்றோ?
No comments:
Post a Comment