Wednesday, October 17, 2012

உண்மைகள்

உண்மைகள்
 
விருந்தோம்பல் தேவையுள்ள எளியோர் தம்மை
.. விருப்பமுடன் வரவேற்றுப் பசியை ஆற்றல்
பொருள்கொடுத்துப் புகழ்த்தேடி அழையாப் போக்கைப்
.. புறந்தள்ளிக் கடமையெனச் செய்தல் ஈகை!
அருளென்றால் இயல்பாக நெஞ்சின் ஊற்றாய்
.. ஆவனசெய்தணைப்பதற்குச் சுரக்கும் அன்பாம்!
இருள்நீக்கி நெஞ்சத்தில் ஒளிவிளங்க
.. எண்ணம்சொல் வினைத்தூய்மைக் குந்தல் கல்வி!
 
உண்மைதனை நிலைநாட்ட அச்சம் கொள்ளா
.. உள்ளத்தின் சீரொழுங்கே வீரம் என்றார்
எண்ணத்தில் இடராமல் தேர்ந்து செய்தும்
.. இறுதியிலே தோல்வியெனில் ஏற்றல் ஆற்றல்!
மண்ணகத்தின் மாண்பங்கே வாழும் மாந்தர்
.. மானமுடை வாழ்க்கைமுறை காட்டும் உண்மை
கண்போல மொழிநாடு இனத்தைப் பேணும்
.. கடமைகளில் தவறாமை பேராண்மையாம்!
 
பழம்பெருமை பேசிடத்தான் மேடை என்னும்
.. பழக்கத்தில் ஆழ்ந்தேநாம் மறந்தோம் பண்டைச்
செழுமையினைப் பலதுறையும் காணவேண்டும்
.. செயல்முறையில் இழிவென்றால் நாணவேண்டும்
ஒழுக்கந்தான் இயக்கத்தின் உயர்வாம் என்னும்
.. உரம்நெஞ்ச நிலம் கொள்ளும் வித்தாய் வேண்டும்
தொழுதற்கே தலைகைகள் என்றே வாழ்வோர்
.. துணிவில்லார் துணையாகித் துயர்மாய்ப்போமா?

No comments:

Post a Comment