நன்றி பயவா வினைகள்
புன்மதியோன் என்றறிந்தும் பொன்மொழிகள் கூறிப்
.. புத்தியினைத் தெளிவாக்கும் முயற்சியெலாம் வீணே
தன்னறிவைப் பெரிதாகத் தான்வியந்து பேசும்
.. தன்னலத்தார் நெஞ்சுநடு நிலைக்காணல் கானல்!
கொன்றுண்ணல் உயிரழிக்கும் கொடுமையென்றே எண்ணாக்
.. குணக்கேடர் பாலிரக்கம் கல்லில்நார் காணல்!
மன்றத்தில் பணிவின்றி மாசுகளைச் சான்றோர்
.. மனஞ்சுளிக்கப் பேசுபவன் சாம்பலின்கீழ் தீயே!
.. புத்தியினைத் தெளிவாக்கும் முயற்சியெலாம் வீணே
தன்னறிவைப் பெரிதாகத் தான்வியந்து பேசும்
.. தன்னலத்தார் நெஞ்சுநடு நிலைக்காணல் கானல்!
கொன்றுண்ணல் உயிரழிக்கும் கொடுமையென்றே எண்ணாக்
.. குணக்கேடர் பாலிரக்கம் கல்லில்நார் காணல்!
மன்றத்தில் பணிவின்றி மாசுகளைச் சான்றோர்
.. மனஞ்சுளிக்கப் பேசுபவன் சாம்பலின்கீழ் தீயே!
என்றேனும் நலம்தன்னைத் தேடிவரும் என்றே
.. எண்ணத்தை வளர்த்திருக்கும் மடியுடையான் ஆற்றல்
புன்மதியால் வன்முறையால் பொதுச்சொத்தை நாசம்
.. புரிசெயலோன் தோள்வலியும் முகப்பொலிவும் மற்றும்
முன்னோர்கள் மொழிந்தவற்றைப் பிறர்க்கெடுத்துச் சொல்வோன்
.. முன்நடக்கும் வழிகாட்டி ஆகாமை போன்று
நன்றிபயவா வினைகள் நாடோறும் செய்வோர்
.. நல்லவர்போல் நடிப்பதனால் நாட்டுக்கென் நன்மை?
.. எண்ணத்தை வளர்த்திருக்கும் மடியுடையான் ஆற்றல்
புன்மதியால் வன்முறையால் பொதுச்சொத்தை நாசம்
.. புரிசெயலோன் தோள்வலியும் முகப்பொலிவும் மற்றும்
முன்னோர்கள் மொழிந்தவற்றைப் பிறர்க்கெடுத்துச் சொல்வோன்
.. முன்நடக்கும் வழிகாட்டி ஆகாமை போன்று
நன்றிபயவா வினைகள் நாடோறும் செய்வோர்
.. நல்லவர்போல் நடிப்பதனால் நாட்டுக்கென் நன்மை?
சென்றுவிட்ட மாண்புகளைச் செப்பியேநாள் ஓட்டும்
.. செயலினிலே ஆக்கத்துக்(கு) ஊக்காமை மேலோ?
வென்றிடுதல் ஒன்றேதான் வீரமென்றே நாடி
.. வெட்கமின்றி விதிமீறி விரைந்திடுதல் கீழ்மை!
குன்றினைப்போல் செல்வத்தைக் குவித்தின்னும் சேர்க்கக்
.. கூடாரை நாடுவோனைக் கேடுவந்து தாக்கும்!
என்றுமெனக் கழிவில்லை என்னுமாண வத்தில்
.. இன்புறுவோர் இருள்வினைகள் நன்றிபயவாவே!
.. செயலினிலே ஆக்கத்துக்(கு) ஊக்காமை மேலோ?
வென்றிடுதல் ஒன்றேதான் வீரமென்றே நாடி
.. வெட்கமின்றி விதிமீறி விரைந்திடுதல் கீழ்மை!
குன்றினைப்போல் செல்வத்தைக் குவித்தின்னும் சேர்க்கக்
.. கூடாரை நாடுவோனைக் கேடுவந்து தாக்கும்!
என்றுமெனக் கழிவில்லை என்னுமாண வத்தில்
.. இன்புறுவோர் இருள்வினைகள் நன்றிபயவாவே!
No comments:
Post a Comment