அன்புப் பாலம்
அன்பெனும்சொல் நிலைக்கேற்ப அர்த்தம் கொள்ளும்
.. அது இரக்கம் நட்புபாசம் காதல் பக்தி
என்றுபல பேர்கொள்ளும் இடத்துக் கேற்ப
.. யாவுக்கும் அடிப்படையாய் அமையும் நெஞ்சம்
தன்கீழே பணிபுரிவோர் தவிப்பைக் கண்டு
.. தன்னருளால் சுரப்பதனை இரக்கம் என்பார்
என்மனைவி என்மக்கள் என்னும் பாசம்
.. என்மொழியே சிறந்ததென என்னும் பற்று!
.. அது இரக்கம் நட்புபாசம் காதல் பக்தி
என்றுபல பேர்கொள்ளும் இடத்துக் கேற்ப
.. யாவுக்கும் அடிப்படையாய் அமையும் நெஞ்சம்
தன்கீழே பணிபுரிவோர் தவிப்பைக் கண்டு
.. தன்னருளால் சுரப்பதனை இரக்கம் என்பார்
என்மனைவி என்மக்கள் என்னும் பாசம்
.. என்மொழியே சிறந்ததென என்னும் பற்று!
ஒன்றுபடும் இருவுள்ளத் துணர்வே காதல்
.. உயர்ந்தவரை வணங்கும்பேரன்பே பக்தி
என்றுபல வாறாக அன்பில் பாய்ச்சல்
.. இணைக்கின்ற உறவுக்குப் பாலம் ஆகும்
நன்றுசெய்வோர் தமைச்சுற்றி ஓங்கும் நட்பு
.. நயமதுவும் அன்பினது விரிவே என்போம்
வென்றுவிடும் பகையினையும் அன்பின் ஆற்றல்
.. விரிவாக்கும் நேயத்தைத் தூய்மை யாக்கும்!
.. உயர்ந்தவரை வணங்கும்பேரன்பே பக்தி
என்றுபல வாறாக அன்பில் பாய்ச்சல்
.. இணைக்கின்ற உறவுக்குப் பாலம் ஆகும்
நன்றுசெய்வோர் தமைச்சுற்றி ஓங்கும் நட்பு
.. நயமதுவும் அன்பினது விரிவே என்போம்
வென்றுவிடும் பகையினையும் அன்பின் ஆற்றல்
.. விரிவாக்கும் நேயத்தைத் தூய்மை யாக்கும்!
ஒற்றுமையை உண்டாக்கும் அன்பு நன்று
.. ஓரிழிவோ ஓரழிவோ அன்பில் இல்லை
பெற்றுக்கொள்வதில்காட்டும் அன்பு போலி
.. பேசாமல் வளர்கின்ற அன்புக்காழம்!
கற்றகல்வி என்றென்றும் மறவாமைபோல்
.. கருத்தொன்றும் அன்பு காலம் கடந்துவாழும்!
வெற்றுரையில் வெளிப்படுத்தும் அன்பு வேடம்!
.. விருந்துவைத்து விளம்பரிக்கும் அன்போ ஓடும்!
.. ஓரிழிவோ ஓரழிவோ அன்பில் இல்லை
பெற்றுக்கொள்வதில்காட்டும் அன்பு போலி
.. பேசாமல் வளர்கின்ற அன்புக்காழம்!
கற்றகல்வி என்றென்றும் மறவாமைபோல்
.. கருத்தொன்றும் அன்பு காலம் கடந்துவாழும்!
வெற்றுரையில் வெளிப்படுத்தும் அன்பு வேடம்!
.. விருந்துவைத்து விளம்பரிக்கும் அன்போ ஓடும்!
அன்பொன்றே பொதுமைநிலை அணைத்தி ணைக்கும்
.. அவதிதரும் அகப்பணிக்கு நன்மருந்து
அன்புள்ளோர் வறுமையிலும் பண்பில் செல்வர்
.. அடக்கமுடன் ஈந்துமகிழ்வின்பம் உச்சம்!
பன்னலமும் வாய்த்திருந்தும் அன்பில்லாரைப்
.. பகைமைத்தீ சுட்டெரிக்கும்; அன்பு வெள்ளம்
தன்னகத்தே தேக்கியுள்ளோர் அழிவில் சிக்கார்
.. தழைக்கட்டும் அன்பெங்கும் செழிக்கும் வையம்!
.. அவதிதரும் அகப்பணிக்கு நன்மருந்து
அன்புள்ளோர் வறுமையிலும் பண்பில் செல்வர்
.. அடக்கமுடன் ஈந்துமகிழ்வின்பம் உச்சம்!
பன்னலமும் வாய்த்திருந்தும் அன்பில்லாரைப்
.. பகைமைத்தீ சுட்டெரிக்கும்; அன்பு வெள்ளம்
தன்னகத்தே தேக்கியுள்ளோர் அழிவில் சிக்கார்
.. தழைக்கட்டும் அன்பெங்கும் செழிக்கும் வையம்!
அன்புசெய்யப் பணமேதும் தேவையில்லை
.. அளவின்றி அகம்சுரக்கும் கொடுத்துவப்போம்
பண்பாக நாம்பழகிக் கொள்வோம் நாளும்
.. பகைபொறாமை வெறுப்பெரிச்சல் யாவும் மாளும்!
ஒன்றுபட மொழிநாடு தடையே இல்லை
.. உயர்வுதாழ்வோடினம் பதவி யாவும் தாண்டி
வென்றுநிற்க அன்புக்கு வீரம் உண்டு
.. விதிசதியை மதிவெல்லத் தூண்டும் அன்பே!
.. அளவின்றி அகம்சுரக்கும் கொடுத்துவப்போம்
பண்பாக நாம்பழகிக் கொள்வோம் நாளும்
.. பகைபொறாமை வெறுப்பெரிச்சல் யாவும் மாளும்!
ஒன்றுபட மொழிநாடு தடையே இல்லை
.. உயர்வுதாழ்வோடினம் பதவி யாவும் தாண்டி
வென்றுநிற்க அன்புக்கு வீரம் உண்டு
.. விதிசதியை மதிவெல்லத் தூண்டும் அன்பே!
No comments:
Post a Comment