நாணம்
நாகரிகப் பண்பாகும் நாணம்; என்றும்
.. நல்லதல்லாச் செயல்நிறுத்த எச்சரிக்கும்!
தாகத்தைத் தீர்க்கமது அருந்தப் போமா?
.. தகாமுறையில் கனியவைத்துப் புசிக்கலாமா?
வேகத்தில் சிந்தனைதன் வீழ்ச்சி காணும்!
.. விருந்திடுவோர் வஞ்சமறிந் துள்ளம் நாணும்!
மோகத்தைநாண் ஏற்றி வீழ்த்தா விட்டால்
.. மூளிருளில் குடும்பநலன் மூழ்கிடாதா?
.. நல்லதல்லாச் செயல்நிறுத்த எச்சரிக்கும்!
தாகத்தைத் தீர்க்கமது அருந்தப் போமா?
.. தகாமுறையில் கனியவைத்துப் புசிக்கலாமா?
வேகத்தில் சிந்தனைதன் வீழ்ச்சி காணும்!
.. விருந்திடுவோர் வஞ்சமறிந் துள்ளம் நாணும்!
மோகத்தைநாண் ஏற்றி வீழ்த்தா விட்டால்
.. மூளிருளில் குடும்பநலன் மூழ்கிடாதா?
பரிவதனால் பரிசுபெற நாண வேண்டும்
.. பணம்கொடுத்துப் புகழடைதல் பண்ட மாற்றா?
புரிசெயலால் புகழடைதல் போற்ற லாகும்
.. பொய்யுரைத்தே மெய்வளர்த்தல் வெட்கக் கேடு!
கரிசனமில்லா நேர்மை காண வேண்டும்!
.. கண்ணோட்டல்பண்பணியைப் பூண வேண்டும்!
விரிவுரையில் விளக்கமொளி வீச வேண்டும்
.. வீம்புக்கு நிற்போரே நைந்த தாம்பு!
.. பணம்கொடுத்துப் புகழடைதல் பண்ட மாற்றா?
புரிசெயலால் புகழடைதல் போற்ற லாகும்
.. பொய்யுரைத்தே மெய்வளர்த்தல் வெட்கக் கேடு!
கரிசனமில்லா நேர்மை காண வேண்டும்!
.. கண்ணோட்டல்பண்பணியைப் பூண வேண்டும்!
விரிவுரையில் விளக்கமொளி வீச வேண்டும்
.. வீம்புக்கு நிற்போரே நைந்த தாம்பு!
அறிவுடையார் அஞ்சுகின்ற செயலைச் செய்யா(து)
.. அகல்வோர்க்கு நாணமணி கலனாய் ஆகும்
செறிவறிந்தும் குறைகூறல் முறையா என்னும்
.. சிந்தனையில் திருத்துகின்ற நாணம் வேண்டும்
நிறைவுதனை எப்படியோ பெருக்கிக் கொள்ள
.. நெஞ்சத்தில் நாணுடைமை காவல் வீரன்!
மறையும்நாள் வரை பிறழா முறையில் வாழும்
.. மனச்சான்றாம் நாணுடைமை மாண்பே யன்றோ?
.. அகல்வோர்க்கு நாணமணி கலனாய் ஆகும்
செறிவறிந்தும் குறைகூறல் முறையா என்னும்
.. சிந்தனையில் திருத்துகின்ற நாணம் வேண்டும்
நிறைவுதனை எப்படியோ பெருக்கிக் கொள்ள
.. நெஞ்சத்தில் நாணுடைமை காவல் வீரன்!
மறையும்நாள் வரை பிறழா முறையில் வாழும்
.. மனச்சான்றாம் நாணுடைமை மாண்பே யன்றோ?
No comments:
Post a Comment