முன்னும் பின்னும்
சதுரத்துள் சிறுவட்டம் வரைதல் கூடும்
.. சதுரமதும் வட்டத்துள் சிறிதாய்க் காணும்
எதுவொன்றும் தனிமையிலே பெரிதாய் தோன்றும்
.. இயல்புக்கு மீறுவதா இயற்கை ஆகும்?
புதுமையென விதிமுறையை மீறல் புன்மை
.. புடலங்காய் சுரைக்காய் போல் பெருக்க லாமா?
பதமான தாள்களிலே வண்ணப் பூக்கள்
.. படைத்துமணம் தெளித்திறைக்குச் சூட்டுவாரா?
.. சதுரமதும் வட்டத்துள் சிறிதாய்க் காணும்
எதுவொன்றும் தனிமையிலே பெரிதாய் தோன்றும்
.. இயல்புக்கு மீறுவதா இயற்கை ஆகும்?
புதுமையென விதிமுறையை மீறல் புன்மை
.. புடலங்காய் சுரைக்காய் போல் பெருக்க லாமா?
பதமான தாள்களிலே வண்ணப் பூக்கள்
.. படைத்துமணம் தெளித்திறைக்குச் சூட்டுவாரா?
முருங்கையிலைக் கீரையிலே சத்துண்டென்றால்
.. முறியுமதன் கிளையெடுத்தா கூரை வேய்வார்?
இருப்பதுவே புனிதமென்று துளசிதன்னை
.. இருட்டறையில் வைத்தெவரும் வளர்க்க மாட்டார்
விருந்தென்று பல்சுவையில் உணவுப் பண்டம்
.. வேகாத நிலையென்றால் வயிறென்னாகும்?
மருந்தான மூலிகைகள் கசக்குமென்றே
.. மாற்றாகத் தேன்கலக்க அளவும் உண்டு!
.. முறியுமதன் கிளையெடுத்தா கூரை வேய்வார்?
இருப்பதுவே புனிதமென்று துளசிதன்னை
.. இருட்டறையில் வைத்தெவரும் வளர்க்க மாட்டார்
விருந்தென்று பல்சுவையில் உணவுப் பண்டம்
.. வேகாத நிலையென்றால் வயிறென்னாகும்?
மருந்தான மூலிகைகள் கசக்குமென்றே
.. மாற்றாகத் தேன்கலக்க அளவும் உண்டு!
நடைமுறைகள் பலகாலம் பயின்று பின்னே
.. நன்முடிவைத் தேர்ந்தேதான் பயன்பாட்டுக்குத்
தடையில்லை எனமுன்னோர் எதையும் செய்தார்
.. தற்கால அறிவியல் முன்னேற்றம் என்று
விடைகொடுத்தாம் எளிமையது பழைமை என்று
.. வீம்புக்கு நாகரிகப் போக்காய்க் காட்டும்
உடை உணவுப் பழக்கங்கள் நோய்க்கிடங்காய்
.. உடல் உள்ளம் உருமாற உவப்பா வாழ்வு?
.. நன்முடிவைத் தேர்ந்தேதான் பயன்பாட்டுக்குத்
தடையில்லை எனமுன்னோர் எதையும் செய்தார்
.. தற்கால அறிவியல் முன்னேற்றம் என்று
விடைகொடுத்தாம் எளிமையது பழைமை என்று
.. வீம்புக்கு நாகரிகப் போக்காய்க் காட்டும்
உடை உணவுப் பழக்கங்கள் நோய்க்கிடங்காய்
.. உடல் உள்ளம் உருமாற உவப்பா வாழ்வு?
No comments:
Post a Comment