சிரிக்கலாமே!
நாவென்றால் நல்லதையே சுவைக்க வேண்டும்!
.. நாநயத்தில் உண்மையொளி சுடர வேண்டும்!
வாவென்று சிரங்குக்கை வழங்க நீண்டால்
.. வஞ்சகத்தை யுணர்ந்தும் கையேந்தலாமா?
தாவென்று கெஞ்சுதலே தலைமைப் பண்பாய்த்
.. தாங்குவதோ ஏங்குவதோ தகுதியாமோ?
சீஎன்றே சிறந்தவர்கள் இழித்துப் பேசும்
.. சிறுமதியார் அறங்கூறின் சிரிக்கலாமே!
.. நாநயத்தில் உண்மையொளி சுடர வேண்டும்!
வாவென்று சிரங்குக்கை வழங்க நீண்டால்
.. வஞ்சகத்தை யுணர்ந்தும் கையேந்தலாமா?
தாவென்று கெஞ்சுதலே தலைமைப் பண்பாய்த்
.. தாங்குவதோ ஏங்குவதோ தகுதியாமோ?
சீஎன்றே சிறந்தவர்கள் இழித்துப் பேசும்
.. சிறுமதியார் அறங்கூறின் சிரிக்கலாமே!
தமிழெழுத்தின் வகையறியான் இலக்கணத்தைத்
.. தான்கற்றுத் தருவேனென் றுரைத்தல் நெல்லின்
உமிதனக்குப் பறந்திடவே தெரியும் என்றே
.. உரைப்பதைப்போல் நகைப்புக்கே இடமுண்டாக்கும்!
குமிழ்கன்னக் குழந்தைக்கு முத்தம் வைக்கக்
.. கொலைநாற்ற வாயுடையோர் முந்தலாமா?
திமிரேறும் தெளிவில்லாச் சிந்தை கொண்டோர்
.. தேர்ந்தவராய்த் தமைஎண்ணச் சிரிக்கலாமே!
.. தான்கற்றுத் தருவேனென் றுரைத்தல் நெல்லின்
உமிதனக்குப் பறந்திடவே தெரியும் என்றே
.. உரைப்பதைப்போல் நகைப்புக்கே இடமுண்டாக்கும்!
குமிழ்கன்னக் குழந்தைக்கு முத்தம் வைக்கக்
.. கொலைநாற்ற வாயுடையோர் முந்தலாமா?
திமிரேறும் தெளிவில்லாச் சிந்தை கொண்டோர்
.. தேர்ந்தவராய்த் தமைஎண்ணச் சிரிக்கலாமே!
மக்களது தீர்ப்புகளால் மனம் வெதும்பி
.. மாசென்றும் தூசென்றும் ஏசுவோர்க்குத்
தக்கவைத்துக் கொள்ளஒரு தகுதி இல்லை!
.. தலைக்கனத்தை வளர்ப்பதிலே காலம் ஓட்டிப்
பக்கதுணையாய்ப் பகையை நம்பி ஒட்டும்
.. பச்சோந்திகளின் நடுவே நானே என்று
கொக்கரித்தால் நகைக்காமல் என்ன செய்வோம்?
.. கூகைநன்றாய் இசைக்குமென்றால் சிரிக்கலாமே!
.. மாசென்றும் தூசென்றும் ஏசுவோர்க்குத்
தக்கவைத்துக் கொள்ளஒரு தகுதி இல்லை!
.. தலைக்கனத்தை வளர்ப்பதிலே காலம் ஓட்டிப்
பக்கதுணையாய்ப் பகையை நம்பி ஒட்டும்
.. பச்சோந்திகளின் நடுவே நானே என்று
கொக்கரித்தால் நகைக்காமல் என்ன செய்வோம்?
.. கூகைநன்றாய் இசைக்குமென்றால் சிரிக்கலாமே!
No comments:
Post a Comment