அநியாயத் தீ!
பதிப்பாளர் சிலரிடத்தில் படைப்பைத் தந்து
.. பணம்பெறவே நான்பட்ட பாடு நெஞ்சம்
கொதிப்படையும் கொடுமையினை நினைக்கும் தோறும்
.. குமறுவதைத் தடுத்திடவே முடியவில்லை
மதிகொண்டு மதிப்போடு வாழ்வதற்கு
.. மனமிருந்தால் போதாதே! நடப்பே வேறு!
நிதிசேர்த்துப் படைப்பாளி வெளியிட்டாலும்
.. நிம்மதியோ நூலகத்தார் ஆணை நோக்கி!
.. பணம்பெறவே நான்பட்ட பாடு நெஞ்சம்
கொதிப்படையும் கொடுமையினை நினைக்கும் தோறும்
.. குமறுவதைத் தடுத்திடவே முடியவில்லை
மதிகொண்டு மதிப்போடு வாழ்வதற்கு
.. மனமிருந்தால் போதாதே! நடப்பே வேறு!
நிதிசேர்த்துப் படைப்பாளி வெளியிட்டாலும்
.. நிம்மதியோ நூலகத்தார் ஆணை நோக்கி!
இலக்கியமும் உளவியலும் கற்று நெஞ்சில்
.. எழும்கருத்தை எழுத்துருவில் எழுப்பி நூல்கள்
பலதுறைகள் சார்ந்தவையாய் படைத்துக் காணும்
.. பலனான மனநிறைவைச் சொல்லப் போமோ?
சிலர்கதைகள் எப்படியோ? பலர்க்கு நேர்மைச்
.. செயல்முறையாய் இருப்பதனால் சிக்கல் நேரும்!
நலம்பொதுவா? தனிச்சொத்தா? உண்மை சொல்ல
.. நாம்நடக்கும் பாதையிலே யாரைக் கேட்போம்?
.. எழும்கருத்தை எழுத்துருவில் எழுப்பி நூல்கள்
பலதுறைகள் சார்ந்தவையாய் படைத்துக் காணும்
.. பலனான மனநிறைவைச் சொல்லப் போமோ?
சிலர்கதைகள் எப்படியோ? பலர்க்கு நேர்மைச்
.. செயல்முறையாய் இருப்பதனால் சிக்கல் நேரும்!
நலம்பொதுவா? தனிச்சொத்தா? உண்மை சொல்ல
.. நாம்நடக்கும் பாதையிலே யாரைக் கேட்போம்?
ஏமாற்றம் இதயத்தில் உரத்தை ஏற்றும்
.. இன்னலிலே இதையேற்போர் எத்துணைப்பேர்?
நாமார்க்கும் அஞ்சோம் என்றிருப்போர் கூட
.. நார்நாராய் கிழிபடுங்கால் என்செய் வாரோ?
தாம்தூம்தை எனக்குதிக்கும் தகுதி இல்லார்
.. தலைநிமிர்ந்தே நடக்குங்கால் தகவேன் தாழும்?
ஆம் இங்கே சூதுகளின் ஆதிக்கத்தில்
.. அநியாயத் தீவானில் சூழும் தானே?
.. இன்னலிலே இதையேற்போர் எத்துணைப்பேர்?
நாமார்க்கும் அஞ்சோம் என்றிருப்போர் கூட
.. நார்நாராய் கிழிபடுங்கால் என்செய் வாரோ?
தாம்தூம்தை எனக்குதிக்கும் தகுதி இல்லார்
.. தலைநிமிர்ந்தே நடக்குங்கால் தகவேன் தாழும்?
ஆம் இங்கே சூதுகளின் ஆதிக்கத்தில்
.. அநியாயத் தீவானில் சூழும் தானே?
No comments:
Post a Comment