போலிகள்
வரலாற்றைப் படைப்பவர்கள் வேண்டி யோரின்
.. வாழ்வை மட்டும் பதியாது மேன்மைப் பண்புக்(கு)
உரியவர்கள் அனைவரது சிறப்பும் கூறும்
.. உண்மையுள்ள உணர்வுடனே எழுத வேண்டும்
தரமான உருவாக்கம் என்றால் மாற்றார்
.. தகுதியையும் மறைக்காமல் குறிக்க வேண்டும்
நிரம்பியுள்ள பொருள்போலி எனத்தெரிந்தால்
.. நிறைமதியோர் குறைகளைய முன்னே நிற்க!
.. வாழ்வை மட்டும் பதியாது மேன்மைப் பண்புக்(கு)
உரியவர்கள் அனைவரது சிறப்பும் கூறும்
.. உண்மையுள்ள உணர்வுடனே எழுத வேண்டும்
தரமான உருவாக்கம் என்றால் மாற்றார்
.. தகுதியையும் மறைக்காமல் குறிக்க வேண்டும்
நிரம்பியுள்ள பொருள்போலி எனத்தெரிந்தால்
.. நிறைமதியோர் குறைகளைய முன்னே நிற்க!
தன்னலத்துப் பேராசைப் பெருக்கம் ஓர்நாள்
.. தடம்மாறி தடுக்கிவிழத் தானே செய்யும்!
பொன்பொருளைத் தவறான வழியை நாடிப்
.. பொதிபொதியாய்ச் சேமித்து வைக்கத் தானே
பண்பாட்டுக் காரராக ஒழுக்கம் தன்னைப்
.. பேணாது தம்குடிக்கே இழிவைச் சேர்ப்பர்
முன்னிலையில் நல்லோர்கள் நகைத்தும் நாணா
.. முறைதவறிப் பெருங்குழியில் வீழ்ந்தே சாவார்!
.. தடம்மாறி தடுக்கிவிழத் தானே செய்யும்!
பொன்பொருளைத் தவறான வழியை நாடிப்
.. பொதிபொதியாய்ச் சேமித்து வைக்கத் தானே
பண்பாட்டுக் காரராக ஒழுக்கம் தன்னைப்
.. பேணாது தம்குடிக்கே இழிவைச் சேர்ப்பர்
முன்னிலையில் நல்லோர்கள் நகைத்தும் நாணா
.. முறைதவறிப் பெருங்குழியில் வீழ்ந்தே சாவார்!
போலிகளைப் போற்றிடுவோர் புனித வேடப்
.. பொருத்தத்தில் பொல்லாங்கை மறைக்கப் பார்ப்பர்
கோலெடுத்துக் கூத்தாட வைக்கக் காண்போம்
.. குறுமதியோர் செயலுக்குப் பேச்சுத் தாளம்
வாலசைந்தால் தலைக்குந்தான் அசைவுண் டாக்கும்
.. வழிதவறும் வளர்ச்சிக்குத் தான் தப் பாட்டம்
காலத்தின் ஓட்டத்தில் கயவர் நெஞ்சம்
.. காட்டுகிற கடும்வளர்ச்சிக் கொடுமை என்னே!
.. பொருத்தத்தில் பொல்லாங்கை மறைக்கப் பார்ப்பர்
கோலெடுத்துக் கூத்தாட வைக்கக் காண்போம்
.. குறுமதியோர் செயலுக்குப் பேச்சுத் தாளம்
வாலசைந்தால் தலைக்குந்தான் அசைவுண் டாக்கும்
.. வழிதவறும் வளர்ச்சிக்குத் தான் தப் பாட்டம்
காலத்தின் ஓட்டத்தில் கயவர் நெஞ்சம்
.. காட்டுகிற கடும்வளர்ச்சிக் கொடுமை என்னே!
No comments:
Post a Comment