உள்ளும் புறமும்
குடியரசு நாட்டினிலே சாலை யோரம்
.. குடிசையின்றி நெடுவானக் கூரையின் கீழ்
மடிபவர்க்கும் வாக்குரிமை கொடுத்தோம் என்பார்
.. மகாத்துமாவைப் படமாக்கி வைத்துக் கொண்டு!
நடிக்கின்றோம் நாமிந்த நாட்டு மக்கள்
.. நாதியற்றோர் வேதனைக்கு விடிவாய்க் கண்ணீர்
வடிக்கின்றோம் எழுதுகின்றோம் பேசு கின்றோம்
.. வாய்ப்பந்தல் யாருக்கு நிழல் கொடுக்கும்?
.. குடிசையின்றி நெடுவானக் கூரையின் கீழ்
மடிபவர்க்கும் வாக்குரிமை கொடுத்தோம் என்பார்
.. மகாத்துமாவைப் படமாக்கி வைத்துக் கொண்டு!
நடிக்கின்றோம் நாமிந்த நாட்டு மக்கள்
.. நாதியற்றோர் வேதனைக்கு விடிவாய்க் கண்ணீர்
வடிக்கின்றோம் எழுதுகின்றோம் பேசு கின்றோம்
.. வாய்ப்பந்தல் யாருக்கு நிழல் கொடுக்கும்?
ஏட்டுக்குத் தகுந்தபடி கேட்டை நன்றே
.. என்றெழுதி பணம்பண்ணல் ஈனம் தானே!
பாட்டுக்குத் தக்கபடி அமைதல் பண்ணா?
.. பண்ணியல்பால் பாவத்தை மாற்றல் பாட்டா?
வீட்டுக்குள் குப்பைகளே குவிந்திருக்க
.. வெளிச்சுவரில் சுண்ணவண்ண வெளிச்சம் ஏய்ப்பு!
நாட்டுக்குப் பெயர்நீட்ட விளம்பரங்கள்
.. நாற்றிசையும் தன்மான வேட்டு வைப்பா?
.. என்றெழுதி பணம்பண்ணல் ஈனம் தானே!
பாட்டுக்குத் தக்கபடி அமைதல் பண்ணா?
.. பண்ணியல்பால் பாவத்தை மாற்றல் பாட்டா?
வீட்டுக்குள் குப்பைகளே குவிந்திருக்க
.. வெளிச்சுவரில் சுண்ணவண்ண வெளிச்சம் ஏய்ப்பு!
நாட்டுக்குப் பெயர்நீட்ட விளம்பரங்கள்
.. நாற்றிசையும் தன்மான வேட்டு வைப்பா?
தகுதியுள்ள தன் இனத்தான் உயர்வைப் பெற்றால்
.. தாங்காது மனங்கொதிப்போன் தமிழன் தானா?
பகுதிஎது விகுதிஎது அறியான் தன்னை
.. பைந்தமிழ்க்குக் காவலனாய்ப் பறையடித்தால்
மிகுதியுமாய் அகந்தையென்னும் சேற்றில் ஆழ்வான்
.. முற்றிவிட்டால் முருங்கையதும் குப்பை தானே?
வெகுமதியைப் பெறுவதற்கு வீசும் சொற்கள்
.. வெற்றோலிகள் எனக்கற்றோர் அறிவார் அன்றோ?
.. தாங்காது மனங்கொதிப்போன் தமிழன் தானா?
பகுதிஎது விகுதிஎது அறியான் தன்னை
.. பைந்தமிழ்க்குக் காவலனாய்ப் பறையடித்தால்
மிகுதியுமாய் அகந்தையென்னும் சேற்றில் ஆழ்வான்
.. முற்றிவிட்டால் முருங்கையதும் குப்பை தானே?
வெகுமதியைப் பெறுவதற்கு வீசும் சொற்கள்
.. வெற்றோலிகள் எனக்கற்றோர் அறிவார் அன்றோ?
No comments:
Post a Comment