பயிற்சியும் பாராட்டும்
தடுக்கிவிழும் இடமெல்லாம் கவிஞர் கூட்டம்
.. தழைத்திருக்கும் எல்லாம் மூலிகைகள் தாமோ?
அடுக்கிவைத்தச் சொற்களெலாம் தேடிச் சேர்க்கும்
.. அரும்முயற்சி ஆரம்பம் வளர்ந்தால் நன்று
தொடுத்தகவி சிறப்பென்றே சொல்ல வைக்கத்
.. தொடர்பயிற்சி இயல்பாகித் தொடுமே வெற்றி!
மிடுக்குநடை வாய்க்கவரும் மொழியின் தேர்ச்சி
.. மெருகூட்டும் என்பதைத்தான் மறக்க லாமா?
.. தழைத்திருக்கும் எல்லாம் மூலிகைகள் தாமோ?
அடுக்கிவைத்தச் சொற்களெலாம் தேடிச் சேர்க்கும்
.. அரும்முயற்சி ஆரம்பம் வளர்ந்தால் நன்று
தொடுத்தகவி சிறப்பென்றே சொல்ல வைக்கத்
.. தொடர்பயிற்சி இயல்பாகித் தொடுமே வெற்றி!
மிடுக்குநடை வாய்க்கவரும் மொழியின் தேர்ச்சி
.. மெருகூட்டும் என்பதைத்தான் மறக்க லாமா?
நிலம்சேரும் மழைநீரால் பயிர்கள் வாழும்
.. நெடுவானைத் தொடுமரங்கள் பெயர்ந்தும் வீழும்
பலவானும் பால்குடித்துப் புரையால் சாவான்
.. படிக்கின்ற கருத்துள்ளப் பதிவாய் வாழச்
சிலவேனும் சொந்தமதி செடியின் பூவாய்ச்
.. சுகம்தரவே மணம்பரப்பும் விதமாய் வேண்டும்!
கலப்புமொழிக் கவிதையது புதிய போக்காய்க்
.. காட்டுதலில் முனைப்புறுவான் கற்றுக் குட்டி!
.. நெடுவானைத் தொடுமரங்கள் பெயர்ந்தும் வீழும்
பலவானும் பால்குடித்துப் புரையால் சாவான்
.. படிக்கின்ற கருத்துள்ளப் பதிவாய் வாழச்
சிலவேனும் சொந்தமதி செடியின் பூவாய்ச்
.. சுகம்தரவே மணம்பரப்பும் விதமாய் வேண்டும்!
கலப்புமொழிக் கவிதையது புதிய போக்காய்க்
.. காட்டுதலில் முனைப்புறுவான் கற்றுக் குட்டி!
கலயத்தைக் காலியாக வைத்தி டாமல்
.. கருத்துகளால் நிரப்பிக்கற் பனையைச் சேர்த்து
நலமாகச் சமைப்பதுவே கலையாம் பாட்டாம்!
.. நாட்டவரும் கேட்டுப்பா ராட்டு வார்கள்!
குலம்பார்த்துப் பாராட்டிக் கொடுப்போர் கொண்ட
.. குணங்கேட்டைக் கொள்கைஎனல் கொடுங்கூற் றாகும்!
வலம்வருங்கால் ஒருகூட்டம் பின்னே செல்லும்
.. வரலாற்றை வற்புறுத்திப் படைத்தல் தீதே!
.. கருத்துகளால் நிரப்பிக்கற் பனையைச் சேர்த்து
நலமாகச் சமைப்பதுவே கலையாம் பாட்டாம்!
.. நாட்டவரும் கேட்டுப்பா ராட்டு வார்கள்!
குலம்பார்த்துப் பாராட்டிக் கொடுப்போர் கொண்ட
.. குணங்கேட்டைக் கொள்கைஎனல் கொடுங்கூற் றாகும்!
வலம்வருங்கால் ஒருகூட்டம் பின்னே செல்லும்
.. வரலாற்றை வற்புறுத்திப் படைத்தல் தீதே!
No comments:
Post a Comment