உண்மை வளர்க்கும் தண்மை
காணுதற்குக் கண்ணிருத்தல் போலே - இல்லறம்
பேணுதற்குப் பெண்ணிருப்ப தாலே
பூணுதற்கு நல்லொழுக்கம் அணியாம் - என்றும்
பொதுநலத்துக் குதவிடுவோன் மணியாம்
மனிதநேயம் தனைவளர்த்தல் சிறப்பு - அறத்தின்
மாண்புணர்ந்து பெருக்குதல் நல் பொறுப்பு
ஏந்துபுகழ் நிலைத்தலே நம் இருப்பு! - பிறரை
இழிவு செய்யும் மடமைக்கு நம் மறுப்பு!
கவிதை செய நல்லுணர்வே தூண்டும்! - புதுமை
கருத்துணர்த்தும் முறைமையிலே வேண்டும்!
செவிக்கு விருந் தளிப்பதிலே உண்மை - கூடச்
சிறப்பிருந்தால் சிந்தை சேரும் தண்மை.
காணுதற்குக் கண்ணிருத்தல் போலே - இல்லறம்
பேணுதற்குப் பெண்ணிருப்ப தாலே
பூணுதற்கு நல்லொழுக்கம் அணியாம் - என்றும்
பொதுநலத்துக் குதவிடுவோன் மணியாம்
மனிதநேயம் தனைவளர்த்தல் சிறப்பு - அறத்தின்
மாண்புணர்ந்து பெருக்குதல் நல் பொறுப்பு
ஏந்துபுகழ் நிலைத்தலே நம் இருப்பு! - பிறரை
இழிவு செய்யும் மடமைக்கு நம் மறுப்பு!
கவிதை செய நல்லுணர்வே தூண்டும்! - புதுமை
கருத்துணர்த்தும் முறைமையிலே வேண்டும்!
செவிக்கு விருந் தளிப்பதிலே உண்மை - கூடச்
சிறப்பிருந்தால் சிந்தை சேரும் தண்மை.
No comments:
Post a Comment